Friday, August 28, 2009

என் அண்ணன்

பிரதிப் தங்கை

திவ்யாவுகாக

எழுதிய கவிதைகள் உங்களுக்காக..........



10 ரூபாய் கண்மைக்கு கிடைத்த
பாக்கியம்
10000 ரூபாய் தங்கத்திற்கு
கிடைக்கவில்லை
உன் கண்களை அழகாக்க





ஒவ்வொரு பூவும்
கடவுளிடம் வரம் கேட்கிறது
உன் கூந்தலில் உயிர் பிரிய..........





என் டார்லிங்
அழகை பார்த்து பெண்ணாக
மாற வேண்டும் என
வரம் கேட்கிறது
அழகி என்னும் தமிழ் வார்த்தை......


திவ்யா என்னும்
கரு தேவதையை
இந்த மண்ணில்பிறந்ததால் தான்
காதலியை பிரிய நேர்ந்தது
அவள் தாயின் கர்ப்பபை!!!!!!!




உன் கண்ணில் கானும்
ராகத்துக்குக்கு பாட்டெழுத முடியாமல்
சிக்கி தவிக்கிறேன்
முட்டாள் கவிஞனாக.






மின்னலும் காதல் வயப்பட்டது
புன்னகையை பார்தது.........
காதலை சொல்லமுடியவில்லை
உன் கண்களை பார்த்து....





உன் சலங்கை முத்துக்கள்
சந்தோசப்படுகிறது
கடவுளிடம் சேர்ந்த மாலை போல.


ஒரு நாள் கூட என் தேவதையை
பார்க்காமல்
இருக்கு முடியாது என்று
கடவுளிடம் குறை கூறியதாம்
நிலா அம்மாவாசை அன்று!


நீ கொஞ்சும் அழகை
கண்டு கடவுளும்
குழந்தையாக பிறக்க ஆசைபடுகிறார்


உன் உருவத்தை பிரிய
மனமில்லையாம்
படம் பிடித்த கேமிராவுக்கு
எல்லாம் உன் அழகு படுத்தும் பாடு



நாங்கள் தானாக விழவில்லை
உன் சீப்பு தான் பிரித்துவிட்டது
என்று கலங்குகிறது
கலைந்த கூந்தல்......

உடம்பில் போடும் ஊசிகூட
கடவுளிடம் வேண்டிக்கொள்கிறது
என் தேவதைக்கு வலிக்ககூடாது என்று

தாங்கள் உன் அழகை
பார்த்து ரசிக்க வரம்
கிடைத்தாலும் உன்னை
வர்ணிக்க முடியாமல்
ஊமையாகி விட்டேன்
என்று மனம் உடைந்து போகிறது
உன் வீட்டுக் கண்ணாடி


உன் புன்னகையை அடகு வைத்து
என் இதயத்தை வாங்கி கொண்டாய்....
கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்
கடனை அடைக்க முடியாமல்
அந்த நகை உன்னிடமே மீளட்டும் என்று

இன்று அழகாக இருக்கிறாள்
இருந்தாலும் அலங்கரிக்க முடியவில்லை
என்று வருத்தப்படுகிறதாம்
உன் சுடிதார் சேலையிடம்.........


குறிப்பு:

பொக்கிசம் படம் பார்த்துவிட்டு வந்தபின்
கூறியவைகள் இவைகள் நீங்களும் முயற்சி செய்யுங்க
வருதானு பார்ப்போம்

Thursday, August 20, 2009

கருப்பனின் கிறுக்கல்கள்

என் அண்ணன் பிரதிப்

அவன் எனக்காக


எழுதிய கவிதைகள் உங்களுக்காக...................





சின்னுமா....
நீ என்னை தத்து எடுக்கவுமில்லை

பெற்று எடுக்கவுமில்லை

இருந்தும் எப்படி

மகனானேன் அன்பு என்னும் பிரசவத்தால்


என் குழந்தைகளை கலங்காமல்
பார்த்து கொள்கிறேன்
புரியவில்லையா
உன் அழகிய கண்களை தான் சொல்கிறேன்







சின்னுமா
நீ பார்ப்பதற்கு சோகமான கீதம்
ஆனால் கேட்பதற்கு சுகமான ராகம்







சின்னு
இவள் யாரும் படித்திராத
ஒரு அழகான கவிதை....
படித்து பார்த்தேன்
இப்பொது அவளோடு எழுதிவிட்டேன்
அவளை போன்றதோரு
அழகிய கவிதையை..............



கருப்பும் அழகு

தான் உன் மச்சத்தை

கண்ட பின்



உன் சிரிப்பிலே நான்
சிதைந்து போனேன்
ஆனால் இதயத்தில் ஏனோ
இரத்தம் வரவில்லை




இவளிடம் சோகத்தை
சொல்லி பாருங்கள்
ஆறுதல் சொல்லமாட்டாள்
ஆறுதலாக இருப்பாள்




உன் கண்ணிர் துளிகளை ரசிப்பேன்
அவைகளுக்கும் ஆசை இருக்காதா
உன் கன்ன அழகை ரசிக்க



பூவிடம் புலம்புகிறது
பூமி உன் கூந்தல்
உன் முகம் காணமுடியவில்லையே என்று




உன் வியர்வையை துடைக்காதே
அதற்கும் ஆசை தான்
உன்னோடு இருக்க


சின்னுமா
உன் பாசத்தை கண்டு
பயப்படுகிறேன்
அம்மாவை மறந்துவிடுவேனோ என




கீரிடத்தை அலங்கரிக்கும்
முத்துகள் போல
பெருமிதம் கொள்கிறது உன் புருவங்கள்




என் செல்லங்கள்
என் நாடி துடிப்புகள்
எகிறிகிறது உங்கள்
பாசத்தினால்..........
குறையுங்கள் உங்கள் முத்தங்களால்




உனது அழகான பாதம்
தன்னை தொடவில்லை
என்று சைக்கிளிடம்
சண்டை போடுகிறது பூமி